ரணிலை போன்ற அடிமை வேறு நாடுகளுக்கு கிடைக்கப்போவதில்லை : கஜேந்திரன் எம்.பி

Sunday, May 5th, 2024 at 11:08 (SLT)

ரணிலை போன்ற அடிமை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு இனி கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் நேற்று(04.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடலில் நீராடிய 3 இளைஞர்களில் ஒருவர் மூழ்கி உயிரிழப்பு

Sunday, May 5th, 2024 at 11:03 (SLT)

வெலிகம கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) வெலிகம, கந்துவ கடலில் அள்ளுண்டு செல்லப்பட்டப்போது இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Sunday, May 5th, 2024 at 10:59 (SLT)

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிராம அதிகாரி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் வாசிக்க >>>

வீடொன்றில் தாய் சடலமாக கண்டுபிடிப்பு : 16 வயது மகனை காணவில்லை யாழில் சம்பவம்

Sunday, May 5th, 2024 at 10:56 (SLT)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.

மேலும் வாசிக்க >>>

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை-தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு

Sunday, May 5th, 2024 at 10:53 (SLT)

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இசை நிகழ்ச்சியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Sunday, May 5th, 2024 at 10:47 (SLT)

இசை நிகழ்ச்சியின் போது இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ரணில் மீது நன்மதிப்பு, ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து வெறுப்பை பெறக் கூடாது:பாட்டலி சம்பிக்க ரணவக்க

Saturday, May 4th, 2024 at 9:55 (SLT)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள கூடாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் செய்தித் தொடர்பாளர் அதிசயத்திலும் செயற்கை அதிசயம்

Saturday, May 4th, 2024 at 9:52 (SLT)

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதாவது தேவையான தகவல்கள் வழங்கப்பட்டவுடன், இந்த கணனி மூலம் உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக பத்திரிகை அறிக்கைகளை வெளியிடுவார்.

மேலும் வாசிக்க >>>

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகு கலை விருது : இலங்கைப் பெண் வெற்றி

Saturday, May 4th, 2024 at 9:48 (SLT)

2024 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கையரான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார். அதாவது The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சலி ராஜசிக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

Saturday, May 4th, 2024 at 9:44 (SLT)

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Saturday, May 4th, 2024 at 9:42 (SLT)

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

Saturday, May 4th, 2024 at 9:39 (SLT)

யாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Saturday, May 4th, 2024 at 9:36 (SLT)

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ஷ?

Saturday, May 4th, 2024 at 9:34 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

Saturday, May 4th, 2024 at 9:32 (SLT)

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>